×

வெடி விபத்தில் 5 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செக்கானூரணியை சேர்ந்த அனுசியாதேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில்  50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மதியம் 1.10 மணியளவில் இந்த ஆலையில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கு பணிபுரிந்த கோபிநாத், விக்கி, வல்லரசு, அமாசி ஆகியோர்  உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற அறைக்கு வெளியே பணிபுரிந்து கொண்டிருந்த பிரேமா என்ற கிருஷ்ணகொண்டம்மாள் கட்டிட செங்கற்கள்பட்டு பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் திருமங்கலம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து ஆலை உரிமையாளர் அனுசியாதேவியை (38) நேற்று நள்ளிரவில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாகியுள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் அனுசியாதேவியின் கணவர் வெள்ளையன் மற்றும் ஆலை மேலாளர் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்….

The post வெடி விபத்தில் 5 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Anusiyadevi ,Sekanurani ,Checkanurani ,Thirumangalam, Madurai district ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்துகொள் என மாணவியை மிரட்டிய வாலிபர் கைது