×

விளாத்திகுளத்தில் வாலிபர் கொலை பைக்கில் ‘லிப்ட்’ கேட்டு சென்று வெட்டிய கொடூரம்-விசாரணையில் திடுக். தகவல்

விளாத்திகுளம் : விளாத்திகுளம், மீரான்பாளையம் தெரு கேசவன் நகரைச் சேர்ந்த சோலையப்பன் மகன் கார்த்திக்ராஜா (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா. 2 மகன்கள் உள்ளனர். கார்த்திக் ராஜாவுக்கும், உறவினரான 17 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீரான்பாளையம் தெருவில் ஒரு வீட்டில் கார்த்திக் ராஜா கொலை செய்யப்பட்டார். விளாத்திகுளம் டிஎஸ்பி ஷிரேயாகுப்தா, இன்ஸ்பெக்டர் இளவரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக் ராஜாவை முன்விரோதம் காரணமாக உறவினரான 17 வயது சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்ராஜாவின் மற்றொரு உறவினரான சம்பத் (55) என்பவர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சிறுவன் ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் சம்பத் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் பற்றி கார்த்திக்ராஜா, அவரது தம்பி கனகராஜ், சம்பத்தின் பேரன் ராஜகுரு ஆகிய 3 பேரும், சிறுவனிடம் தட்டிக் கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு முற்றிய நிலையில் சிறுவனை 3 பேரும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டே இருந்த சிறுவன், கார்த்திக் ராஜா வீட்டு வழியாக செல்லும் போதெல்லாம் அவரை முறைத்துப் பார்த்து உள்ளார். இதை 2 நாட்களுக்கு முன்பு கார்த்திக் ராஜா தட்டிக் கேட்கவே 2 பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் இருந்து கார்த்திக்ராஜா பைக்கில் சென்றார். அப்போது அங்கு நின்ற சிறுவன், அவரை மறித்து ‘லிப்ட்’ கேட்டுள்ளார். இதனால் சிறுவனுக்கு கோபம் தணிந்து விட்டதாகக் கருதிய கார்த்திக்ராஜா அவரை பைக்கில் ஏற்றியுள்ளார். மீரான்பாளையம் தெரு, கேசவன் நகர் அருகே பைக் வந்த போது, பின் சீட்டில் அமர்ந்து வந்த சிறுவன், திடீரென்று இடுப்பில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தலையில் வெட்டினார். இதில் பைக் நிலை தடுமாறி கார்த்திக் ராஜா கீழே விழுந்தார். உடனே சுதாரித்து கொண்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள பக்கத்து வீட்டுக்குள் ஓடினார். ஆனால் அந்த சிறுவன், கார்த்திக்ராஜாவை அந்த வீட்டுக்குள் விரட்டிச் சென்று மீண்டும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.தகவலறிந்த விளாத்திகுளம் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக்ராஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக்ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் போலீசார் கொண்டு செல்ல முயன்ற போது, ஆம்புலன்சை வழிமறித்து கார்த்திக் ராஜாவின் உறவினர்கள் திடீர் மறியல் நடத்தினர். சிறுவனின் உறவினர் டாக்டராக இருப்பதால், அவர் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக போலீசார் தெரிவிக்கவே, அவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவே சிறுவனை போலீசார் கைது செய்தனர்….

The post விளாத்திகுளத்தில் வாலிபர் கொலை பைக்கில் ‘லிப்ட்’ கேட்டு சென்று வெட்டிய கொடூரம்-விசாரணையில் திடுக். தகவல் appeared first on Dinakaran.

Tags : Vlatikulam ,Karthigraja ,Solayappan ,Kesavan City, Meeranpalayam Street, Vlatikulam ,Vollyber ,
× RELATED தொகுதிக்கு அடிப்படை வசதி: ஐட்ரீம்ஸ் மூர்த்தி உறுதி