×

மனைவியின் கண் எதிரே நடுரோட்டில் புதுமாப்பிள்ளை சரமாரி குத்திக்கொலை: கொள்ளையர்கள் வெறிச்செயல்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நெக்குண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமு (25), தொழிலாளி. இவரது மனைவி அனுராதா (23). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தனது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு தாமு மனைவியுடன் நேற்று பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். தூர்லப்பள்ளி அருகே கொத்தகுண்டவம் பகுதி வழியாக வந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கும்பல் திடீரென சாலையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் தாமுவின் பைக்கை வழிமடக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த தாமு, பைக்கை நிறுத்தினார். அப்போது அந்த கும்பல் தாமு அணிந்திருந்த நகைகளை தரும்படி கேட்டுள்ளர். அதற்கு தாமு தரமறுத்து சத்தம் போட்டுள்ளார். அவரது மனைவியும் கூச்சலிட்டார். அப்போது அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து இருவர் மீதும் தூவியுள்ளனர். இதனால் புதுமண தம்பதி இருவரும் நிலைகுலைந்து சாலையில் விழுந்தனர். அப்போது அந்த கும்பல் தாமுவின் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயன்றனர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட தாமு, அவர்களிடம் போராடியபடி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தாமுவை கத்தியால் சரமாரி குத்தியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தாமு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கும்பல் தப்பிஓடிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த புங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தப்பிய கொலையாளிகளை தேடிவருகின்றனர்.திருமணமான 6 மாதத்தில் தனது கண்முன்னே கணவர் கொலையான சம்பவத்தை பார்த்து அவரது மனைவி கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது….

The post மனைவியின் கண் எதிரே நடுரோட்டில் புதுமாப்பிள்ளை சரமாரி குத்திக்கொலை: கொள்ளையர்கள் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Saramari ,Nutrott ,Thirumalai ,Thamu ,Nekundi village, Chittoor District, Andhra state ,Anurada ,
× RELATED மக்கள் பிரச்சனைகள் குறித்து...