×

போலீஸ்காரரை தாக்கிய 3 ஐ.டி.ஊழியர்கள் கைது

ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் சாலை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆலந்துார், காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தேவன்(31) இவர் பரங்கிமலை போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள பள்ளத்தை ஜேசிபி எந்திரம் மூலம் நெடுஞ்சாலை ஊழியர்களைக் கொண்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, போரூரில் இருந்து கிண்டி நோக்கி காரில் வந்த மூன்று பேர் வலது புறம் திரும்ப வழி விடுமாறு காவலர் தேவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சற்று தூரம் தள்ளி யூடர்ன் எடுத்துச் செல்லுமாறு தேவன் கூறினார். போதையில் இருந்த 3 பேரும் காவலர் தேவனை கீழே தள்ளி, பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு காரில் தப்பி விட்டனர். இது தொபர்பாக காவலர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் காவலர் தேவனை குடிபோதையில் தாக்கியது யார் என்று தெரியவந்தது. இதையடுத்து ஐ.டி. ஊழியர்களான சாலிக்கிராமம், சியாமளா கார்டனை சேர்ந்த ஆதித்யா (28), அஸ்வின் (28), வேளச்சேரி, தண்டீஸ்வரம் மெயின்ரோட்டை சேர்ந்த மதுசூதனன் (26 )ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் அவர்கள் வைத்திருந்த 11 பீர்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்., பின்னர் 3 பேரையும் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post போலீஸ்காரரை தாக்கிய 3 ஐ.டி.ஊழியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : 3 ,I.A. ,TD ,Alandur ,Manipakam ,3 I.A. ,Dinakaran ,
× RELATED கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது