×

எடப்பாடி தவிர்த்த நிலையில் பசும்பொன் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தவிர்த்த நிலையில் பசும்பொன் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை நடக்கிறது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி குருபூஜையில் பங்கேற்பத்தை தவிர்த்த நிலையில் தேவர் குரு பூஜையில் கலந்துகொள்ள ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் 30ம் தேதி (நாளை) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காலை 11.30 மணிக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கிருஷ்ணன், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்….

The post எடப்பாடி தவிர்த்த நிலையில் பசும்பொன் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Edapadi ,O. Bannerselvam ,Chennai ,Edabadi Palanisamy ,Pashumbon ,O.K. Bannerselvam ,Pasumbon ,Muthuramalinga Devar ,Pazhembon ,O. Pannerselvam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்...