×

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய இன்ஜினியரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியை: மதுரையில் இன்று பரபரப்பு

மதுரை: காதலித்து கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய இன்ஜினியரின் திருமணத்தை ஆசிரியை இன்று தடுத்து நிறுத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் நாகபிரியா (30). பிசிஏ படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி (32). சாப்ட்வேர் இன்ஜினியர். தற்போது பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். உறவினர்களான சின்னசாமிக்கும், நாகபிரியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். நெருங்கி பழகியதால் தற்போது நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில், சின்னச்சாமிக்கு அவரது பெற்றோர் விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்தனர். இன்று காலை திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து நேற்றிரவு தகவல் அறிந்த காதலி நாகபிரியா தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் இன்று காலை திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார். சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி ஏமாற்றிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என அவர் குற்றம்சாட்டினார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்து சின்னச்சாமி வீட்டார் மற்றும் நாகபிரியா தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நாகபிரியா, சின்னச்சாமி, அவரது பெற்றோரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி விசாரணை நடத்தினார். கர்ப்பிணி நாகபிரியா, சின்னசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார். இன்ஜினியர் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை ஆசிரியை தடுத்து நிறுத்திய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய இன்ஜினியரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியை: மதுரையில் இன்று பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madurah ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை