- ராயபுரம் ஊராட்சி
- சட்டமன்ற உறுப்பினர்
- தண்டாயர்பேட்டை
- 53வது வார்டு
- தங்கசாலை புதிய பாலம்
- மூலகொத்தளம் மயானம்
- பார்த்தசாரதி மெம்பிரிட்ஜ்
தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 53வது வார்டு தங்கசாலை புதிய பாலம், மூலகொத்தலம் மயானம், பார்த்தசாரதி மேம்பாலம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து மாற்றப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, இப்பகுதியில் புதிதாக மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். அவரது உத்தரவின் பேரில், மேற்கண்ட பகுதிகளில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க ரூ.65.74 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, புதிய தெரு விளக்கு அமைப்பதற்காக 3 பகுதிகளை எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, மாநகராட்சி அதிகாரிகள், வட்ட செயலாளர் கவுரீஸ்வரன், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….
The post ராயபுரம் தொகுதியில் ரூ.66 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.