×

தீபாவளியை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம்- நெல்லை- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  தாம்பரம்- நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். அதேபோன்று, நெல்லை- சென்னை எழும்பூர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் (06022) நெல்லையில் இருந்து  21ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். இந்த பண்டிகை கால சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post தீபாவளியை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram-Nellai ,Diwali ,Southern Railway ,Chennai ,Tambaram- ,Nellai ,Chennai Egmore ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...