சுட்டித்தனமான நடிப்பில் கெட்டிக்கார் நஸ்ரியா. பீக்கில் இருந்த போதே நடிகர் பஹத்பாசிலை மணந்துகொண்டு செட்டிலானார். அவர்களின் காதல் கைகூட, தான் பட வாய்ப்பை விட்டுக் கொடுத்த சீக்ரெட் பற்றி தெரிவித்தார் நித்யா மேனன். ‘பெங்களூர் டேஸ் மலையாள படத்துல என்னயதான் ஹீரோயினா நடிக்க கேட்டாங்க. வேற படங்கள்ல பிஸியா இருந்ததாலே அந்த வேஷத்த ஏற்க முடியல. என்னோட சான்ஸ் நஸ்ரியாவுக்கு போனது.
பஹத் பாசில் ஹீரோவா நடிச்சார். அப்பத்தான் பஹத்துக்கும் நஸ்ரியாவுக்கும் காதல் மலர்ந்துச்சி... படம் நடக்கும்போதே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறதா அறிவிச்சாங்க... எனக்கு (நித்யா) வந்த பட சான்ஸ விட்டுக் கொடுத்ததால தான் தங்களோட மேரேஜ் நடந்துச்சுன்னு என்னய சந்திக்கறப்பவல்லாம் இந்த ஜோடி பெருமையா சொல்லுவாங்க.... அதே சமயம் இப்படத்தில் நான் கெஸ்ட்ரோலில் நடித்தேன்’ என்றார்.