×

மேட்டுப்பாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணனை கொன்ற தம்பி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை திம்மம்பாளையம்புதூரை சேர்ந்தவர் ரங்கராஜ் (67). பைனான்சியர். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார். இவரது தம்பி குபேந்திரன் (57). விவசாயி, மனைவி இறந்து விட்டதால், சிறுமுகை பழத்தோட்டம் பகுதியில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தவே, அங்கிருந்து வெளியேறி, அண்ணன் ரங்கராஜ் வீட்டில் 3 மாதத்திற்கு மேலாக தங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குபேந்திரனுடன் பழகிவந்த பெண் அவரை தேடி ரங்கராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது குபேந்திரன் இல்லாததால், ரங்கராஜ் அந்தப் பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். திடீரென அங்கு வந்த குபேந்திரன், இருவரையும் திட்டியுள்ளார். இதனால் அந்த பெண் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின் குபேந்திரனுக்கும், ரங்கராஜூக்கும் வாக்குவாதம் நடந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கராஜை, ஆத்திரத்தில் இருந்த குபேந்திரன் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து குபேந்திரனை கைது செய்தனர்….

The post மேட்டுப்பாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணனை கொன்ற தம்பி appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Rangaraj ,Thimmampalayambutur ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...