×

தேர்தல் பறக்கும்படை சோதனை; படப்பிடிப்புகள் ஒத்திவைப்பு

தேர்தல் பறக்கும் படையின் சோதனை காரணமாக சினிமா படப்பிடிப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதற்காக முக்கிய குழுவினர் அந்தந்த மாவட்டங்களில் தங்கியுள்ளனர். சிலர் தினந்தோறும் சென்னையிலிருந்து படப்பிடிப்பு செலவுகளுக்காக பணத்தை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். அப்போது தேர்தல் பறக்கும் படை சோதனை காரணமாக இவர்கள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

சில சமயம் ஆவணம் இல்லாதபோது பணம் பறிமுதல் செய்யப்படும் சூழலும் இருப்பதால் படக்குழு திணறிப்போகின்றனர். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து வந்தது. தேர்தல் காரணமாக பட ஷூட்டிங் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுபோல் வேறு சில படங்களின் ஷூட்டிங்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Filming ,
× RELATED டோலிவுட்டில் படப்பிடிப்புகள்...