×

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல மேஜிக் நிபுணர் மரணம்: உத்தரபிரதேசத்தில் சோகம்

கான்பூர்: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல மேஜிக் கலைஞர் ஓ.பி.சர்மா, கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணம் அடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஓ.பி.சர்மா (76), தனது மேஜிக் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து பார்ச்சூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல்லியா மாவட்டத்தை சேர்ந்த ஓபி சர்மா, தொழிலுக்காக கான்பூரில் உள்ள சிறிய ஆயுத தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். பின்னர் முறையான பயிற்சி பெற்று பிரபல மேஜிக் நிபுணராக உருவெடுத்தார். கிட்டதட்ட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேஜிக் ஷோக்களை நடத்திய இவருக்கு, மனைவி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஓப் ஷர்மாவின் இளைய மகன் சத் பிரகாஷ் சர்மா, ஜூனியர் ஓபி சர்மா என்றும் அழைக்கப்படுகிறார். அவர் தற்போது மேஜிக் ஷோக்களை நடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் கோவிந்த் நகர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல மேஜிக் நிபுணர் மரணம்: உத்தரபிரதேசத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Pradesh ,Kanpur ,O. P. Sharma ,Uttar Pradesh ,
× RELATED வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்;...