×

சம உரிமைக்காக பத்மபிரியா புதுமுயற்சி

ஆண், பெண் சம உரிமை என்பதை வலியுறுத்த பத்மப்ரியா புதுமுயற்சி மேற் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், பிரம்மன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை மணந்தார். அன்றுமுதல் பத்மப்ரியா ஜாஸ்மின் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். அதாவது தனது பெயருக்கு பின்னால் கணவர் பெயரையும் இணைத்துக்கொண்டிருக்கிறார்.

ஆண் சம உரிமையில் பத்மப்ரியா, ஜாஸ்மின் இருவரும் ஒருவருகொருவர் சளைத்தவர்கள் இல்லை. தற்போது ஜாஸ்மின் தனது பெயருக்கு பின்னால் பத்மப்ரியா பெயரை சேர்த்துக்கொள்ள கேட்டு தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்திருக்கிறார். இதுகுறித்து பத்மப்ரியா கூறும்போது,’இந்திய பெண்கள் திருமணத்துக்கு பிறகு தங்கள் பெயருக்கு பின்னால் கணவர் பெயரை சேர்த்துக்கொள்கின்றனர்.

ஆனால் ஆண்கள் விஷயத்தில் இதுபோல் கடைபிடிக்கப்படுவதில்லை. எனது கணவர் ஆண், பெண் சம உரிமை பேணுபவர். எனவே தனது பெயருக்கு பின்னால் எனது (பத்மப்ரியா) பெயரை சேர்க்க கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார். இதுவே அவர் ஆணுக்கு பெண்ணும் சமம் என்பதை மதிப்பதற்கான அத்தாட்சி’ என்றார்.

Tags : Padmapriya ,
× RELATED சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்கள்...