×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.! சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பெரியகுளம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்காணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் அறிவித்துள்ளார்….

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.! சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Periyakulam ,Kumbakkarai ,Dinakaran ,
× RELATED நீர்வரத்து குறைந்தும் மக்கள் வரத்து...