×

திருவாடானை அருகே தலையை துண்டித்து பிரபல ரவுடி கொலை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை – செங்கமடை செல்லும் சாலையில் உள்ள கண்மாய் பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை துண்டித்து நேற்று  கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலும், தலையும் அருகருகே கிடந்தன. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று உடல் மற்றும் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலையோரம் நின்ற அவரது டூவீலரையும் கைப்பற்றினர். விசாரணையில், கொலையானவர் திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முத்துப்பாண்டி (42) என தெரிந்தது. இவருக்கு நிரோஷா என்ற மனைவி, ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி, மகளுடன் பிரிந்து சென்று விட்டார். முத்துப்பாண்டி மீது திருவாடானை, திருவேகம்பத்தூர், ராமநாதபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, திருட்டு, கஞ்சா உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவாடானை போலீசார் வழக்குப்பதிந்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இவர் மீது கொலை வழக்கு உள்ளதால் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது….

The post திருவாடானை அருகே தலையை துண்டித்து பிரபல ரவுடி கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Tiruvadanai ,Ramanathapuram District, Thiruvadanai ,Chengamada, Kanmai ,Chengamada ,Rowdy ,
× RELATED வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை