×

எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்

சென்னை:  எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்பி மைத்ரேயன், ஓபிஎஸ் அணியில் நேற்று மீண்டும் இணைந்தார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரை ஓபிஎஸ் தனது அணியில் இணைத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மைத்ரேயன், “ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ். 2017ம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருடன் இருந்தேன், யானைக்கும் அடி சறுக்கும், எனக்கு புத்தி பேதலித்து போனது. வேலியை தாண்டிய வெள்ளாடாக மாறினேன். இபிஎஸ் அணியில் சேர்ந்து 108 நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பி உள்ளேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும் கூட தொலைபேசியில் அழைத்து விசாரித்தவர் ஓபிஎஸ். அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்சுக்கு மட்டும்தான் உள்ளது” என்றார்….

The post எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Maithreyan ,Edappadi ,OPS ,Chennai ,Maitreyan ,Egmore ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்