×

மின்சாரம் பாய்ந்து தாய், மகள் பலி

கோவை: கோவை துடியலூர் அருகில் உள்ள விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி கார்த்திகா (52) மற்றும் மகள் அர்ச்சனா (18) ஆகியோர் இருந்தனர். அர்ச்சனா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அர்ச்சனா கல்லூரி செல்லும் முன்பு குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு  அர்ச்சனாவை தாக்கியது.அர்ச்சனா சத்தம்போடவே, சமையலறையில் இருந்த தாய் கார்த்திகா மகளை காப்பாற்ற உள்ளே வந்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு மற்றவர்கள் வந்து பார்த்தபோது, பாத்ரூமில் தாய், மகள் இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

The post மின்சாரம் பாய்ந்து தாய், மகள் பலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Anand ,Viswanathapuram Meenakshi Garden ,Tudiyalur, Coimbatore ,Trichy ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...