×

15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இன்ஸ்பெக்டர் உள்பட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு

சென்னை: வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கு நேற்று தண்டனை வழங்க இருந்த நிலையில் மீண்டும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜ பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி (எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில், 22 பேரை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட  மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக்கட்டத்தின்போது இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த, வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரத்தை நேற்று கூறுவதாக நீதிபதி தெரிவித்தார். ஆனால் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவில்லை. மீண்டும் தண்டனைவழங்குவது குறித்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது….

The post 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இன்ஸ்பெக்டர் உள்பட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vannarappeta ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்