திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய படூர் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மற்றும் ஊராட்சி பொது நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் வேம்புலி அம்மன் கோயில் தெரு பேவர் பிளாக் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் கலந்துக் கொண்டு புதிய பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், பாரதியார் தெருவில் மழைநீர் வடிகால்வாய், வேம்புலி அம்மன் கோயில் தெரு சிறுபாலம் ஆகியவற்றுக்கான பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் படூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் வனிதா சேட்டு உள்ளிட்டோர் உடனிருந்தனர்….
The post படூர் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் சாலை appeared first on Dinakaran.