×

கோவை துடியலூர் குப்பை தொட்டியில் கிடந்த இடது கை யாருடையது என்று போலீஸ் கண்டுபிடித்தது..!!

கோவை: கோவை துடியலூர் குப்பை தொட்டியில் கிடந்த இடது கை, யாருடையது என்று போலீஸ் கண்டுபிடித்தது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 39 வயதான பிரபு என்பவரின் கை என்று கண்டறியப்பட்டுள்ளது. துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் 4 நாட்களுக்கு முன் ஆண் ஒருவரின் இடது கை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கை கிடந்த வழக்கு தொடர்பாக கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, கைகள் பதப்படுத்தப்பட்ட பெட்டியின் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் கை என தெரியவந்துள்ளது. கோவை சரவணம்பட்டியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபுவின் செல்போன் 15ம் தேதி ஸ்விட்ச் ஆப் ஆனது. இதனால் சந்தேகமடைந்த மனைவி, கணவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பிரபுவின் கைரேகை உறுதி செய்யப்பட்டு குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது பிரபுவின் கை தான் என்பது  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கை, யாருடையது என்று தெரியவந்ததால் இந்த துப்பு மூலம் கொலையாளியை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். …

The post கோவை துடியலூர் குப்பை தொட்டியில் கிடந்த இடது கை யாருடையது என்று போலீஸ் கண்டுபிடித்தது..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dudiyalur, Coimbatore ,Erode district ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...