×

சீன கடன் ஆப்களின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி:  சீனாவின் கடன் ஆப்களான ஈஸ்பஸ், ரேசர்பே, கேஷ்ப்ரீ உள்ளிட்டவற்றின் ரூ.46.67 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி, மும்பை, காசியாபாத், லக்னோ மற்றும் கயாவில் பல்வேறு இடங்களில் அமைந்திருந்த சீன நிறுவனங்களின் கடன் ஆப்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடன் ஆப் நிறுவனங்களின் ஆன்லைன் கணக்குகளில் அதிக அளவிலான நிலுவை தொகைகள் பராமரிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. புனே ஈஸ்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கில் ரூ.33.36 கோடி, பெங்களூர் ரேசர்பே சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.8.21 கோடி, பெங்களூரில் உள்ள கேஷ்ப்ரீ இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.1.28 கோடி, டெல்லியில் பேடிஎம் பேமென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.1.11 கோடி கணக்கில் இருந்தது. இதனை தொடர்ந்து இவற்றின்மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன கடன் ஆப்களின் ரூ.46.67 கோடி நிதியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது….

The post சீன கடன் ஆப்களின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,The Enforcement Directorate ,Razerpay ,Cashfree ,Delhi ,Mumbai ,Ghaziabad ,Dinakaran ,
× RELATED புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா...