புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு. லலித் கடந்த மாதம் 26ம் தேதி பதவி ஏற்று கொண்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான விசாரணை நடைமுறைகளை தலைமை நீதிபதி மாற்றி அமைத்தார். அதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களில் அரசியல் சாசன அமர்வும், மற்ற நாட்களில் காலையில் புதிய வழக்குகள் மீதான விசாரணையும், பிற்பகல் 2 மணிக்கு மேல் பழைய வழக்குகளின் விசாரணையும் நடத்தப்படும் என்ற மாற்றப்பட்டது. இந்த நடைமுறையின் கீழ் தான் தினமும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுல், ‘தலைமை நீதிபதியின் வழக்கு விசாரணை புதிய மாற்றத்தால் பழைய வழக்குகளின் விசாரணையை பிற்பகலில் விசாரிப்பதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்….
The post புதிய நடைமுறைகளால் வழக்கு விசாரணை பாதிப்பு: உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கருத்து appeared first on Dinakaran.