×

ஆன்லைன் கிரிக்கெட்டில் பந்தயம் கட்டிரூ.1 லட்சம் இழந்த வாலிபர்: தந்தைக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாயம்

சேலம்: சேலத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில்ரூ.1லட்சத்தை இழந்த வாலிபர் தலைமறைவானார். சேலம் கொண்டலாம்பட்டி அருகே புதூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சேகர், வெள்ளி பட்டறை தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(26). இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியே சென்ற சக்திவேல் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே சேகரின் வாட்ஸ் அப்புக்கு, நான் வீட்டை விட்டு செல்கிறேன், என்னை தேட வேண்டாம் என சக்திவேல் தகவல் அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த சேகர் விசாரித்தபோது, ஆன்லைனில் கிரிக்கெட்டில் யார் வெற்றி பெறுவார் என சக்திவேல் சுமார் ஒரு லட்சம் வரை கடன் வாங்கி பந்தயம் கட்டி இழந்ததும், கடன் கொடுத்தவர்கள் கேட்டதால் திருப்பிக் கேட்டு நெருக்கியதால் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.  இதுகுறித்து சேகர் புகாரின்படி கொண்டலாம்பட்டி போலீசார் சக்திவேலின் செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஆன்லைன் கிரிக்கெட்டில் பந்தயம் கட்டிரூ.1 லட்சம் இழந்த வாலிபர்: தந்தைக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Salem ,Shekhar ,Putur Agraharam ,Kondalambatti, Salem ,
× RELATED காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல்