×

மோசடி மன்னன் சுகேஷை சிறையில் சந்தித்த 4 நடிகைகள்: பல லட்ச ரூபாய் பரிசாக பெற்றது அம்பலம்

டெல்லி : பிரபல மோசடி மன்னனான சுகேஷ் சந்திரசேகரை திகார் சிறையில் வைத்து 4 நடிகைகளை சந்தித்து பல லட்ச ரூபாயை பரிசாக பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. கன்னி தீவு கதை போன்று நீண்டு கொண்டே செல்லும் சுகேஷ் சந்திரசேகரின் மோசடிகளை அமலாக்கத்துறையினரும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் அம்பலப்படுத்திய வண்ணம் உள்ளனர். இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டிருந்த போது அதை மீட்டுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு உள்ளது. தொழிலதிபரை ஏமாற்றி 200 கோடி ரூபாயை பெற்றதாக மற்றோரு வழக்கில், தற்போது சுகேஷ் சந்திரசேகர் சிறையில் உள்ளார். இந்த பணத்தை நடிகைகளுக்கு வாரி இறைத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அவர்களுக்கு வாங்கி கொடுத்தார் என்பது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்காகும். இது தொடர்பாக பிரபல ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் 3 நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். குற்ற பத்திரிகையில் இவரது பெயர் இருப்பதால் எந்த நேரத்திலும் நடிகை ஜாக்குலின் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று நடிகை நோரா ஃபதேரியிடம் டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறையில் வைத்தே சுகேஷ் சந்திரசேகரை நடிகை நிக்கி தம்போலி சந்தித்து, 3.5 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர கைப்பையை பரிசாக வாங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நடிகைகள் சாஹட் கன்னா, சோபியா சிங், ஆருஷா பாட்டில் ஆகியோரும் சுகேஷை சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.    …

The post மோசடி மன்னன் சுகேஷை சிறையில் சந்தித்த 4 நடிகைகள்: பல லட்ச ரூபாய் பரிசாக பெற்றது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : kingpin Sukesh ,Ambalam ,Delhi ,kingpin ,Sukesh Chandrasekhar ,Tihar Jail ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...