×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு!: நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றது ஒன்றிய அரசு:நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த மார்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். எம்.பி.சி.ஆக இருந்த நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பழங்குடி பட்டியலில் சேர்க்க 1985ல் நீதிபதி லோகூர் குழுவும் 1967ல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் பரிந்துரைத்திருந்தது. மிகவும் நலிவுற்ற, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களில் ஒன்று நரிக்குறவர் சமூகம். பழங்குயினருக்கு வழங்கப்படும் அரசியல் சட்ட பாதுகாப்பு, நலத்திட்டங்களைப் பெற தகுதியானவர்கள் நரிக்குறவர்கள். பலமுறை ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தும் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை. எனவே, பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்குமாறு பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். …

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு!: நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Union Cabinet ,Narikuruvar ,Sparrow ,Delhi ,Minister ,Arjun ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...