×

காங்கயம் அருகே நில அதிர்வு? வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

காங்கயம்: காங்கயம் அருகே நேற்று மதியம் வெடி சத்தத்துடன் சில நொடிகள் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். காங்கயம் அருகே சிவன்மலை, ஆலாம்பாடி, நால்ரோடு, கீரனூர், திட்டுப்பாறை ஆகிய கிராமங்களின் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 2.20 மணியளவில் திடீரென சில நொடிகள் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பெரிய சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சில வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கியுள்ளது. சிலர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீதியில் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த சத்தமும், நில அதிர்வும் மீண்டும் ஏற்படவில்லை என பொதுமக்கள் கூறினர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை….

The post காங்கயம் அருகே நில அதிர்வு? வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Gangayama ,Kangayam ,Dinakaran ,
× RELATED காங்கயத்தில் 126 வயது மூதாட்டி மரணம்