×

தமிழக மக்களிடம் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு பெரியார் மண்ணை வருத்தத்தோடு பிரிந்து செல்கிறேன்: நிறைவு கூட்டத்தில் ராகுல்காந்தி உருக்கம்

நாகர்கோவில்: தமிழக – கேரளா எல்லையான தளச்சான்விளையில் நேற்றைய பாதயாத்திரையை மாலை 6.40 மணிக்கு நிறைவு செய்த ராகுல் காந்தி, அங்கு போடப்பட்டிருந்த தற்காலிக மேடையில் பேசியதாவது: தமிழ்நாட்டில் பாத யாத்திரை மிகவும் சுகமான அனுபவமாக இருந்தது. யாத்திரையின் கொள்கைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவை தற்போது பல நிறுவனங்களும், சிலரும் இணைந்து ஜாதி, மத ரீதியில் பிரித்து ஒற்றுமை இல்லாமல் உருவாக்க துடிக்கிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு நன்மை செய்வதற்காகவும், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு நன்மை செய்வதற்காகவும் மக்களை பிரிக்கிறார்கள். அதற்காக மக்களிடத்தில் மோதலை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்குவதே ஆட்சியாளர்களின் லட்சியமாக உள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் ஒற்றுமையாக, ஒருமைப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்தியா என்பது ஓரிரு முதலாளிகளுக்கு உரிய நாடு அல்ல. கோடான கோடி மக்களுக்கு உரிமையானது இந்த நாடு. இந்திய மக்களுக்கு கடும் உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை. இதை மாற்றத்தான் இந்த பயணம். தமிழக மக்களிடம் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. எனவே மிகுந்த வருத்தத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். பெரியார் மண்ணை வருத்தத்தோடு பிரிந்து செல்கிறேன். ஆனால் நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்கிறேன் என்கின்ற மகிழ்ச்சியில் செல்கிறேன். நாராயண குருவும் பெரியாரும் ஒரே கருத்தை தான் வலியுறுத்தியுள்ளார்கள். ஏழை மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெரியவர்கள் அவர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார். பின்னர் தளச்சான்விளையில் இருந்து காரில் கேரள மாநிலத்தில் உள்ள செருவாரக்கோணம் பள்ளி வளாகத்திற்கு சென்றார். அங்கு இரவு தங்கி விட்டு இன்று கேரள மாநிலம் பாறசாலை ஜங்ஷனில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்….

The post தமிழக மக்களிடம் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு பெரியார் மண்ணை வருத்தத்தோடு பிரிந்து செல்கிறேன்: நிறைவு கூட்டத்தில் ராகுல்காந்தி உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Periyar ,Rakulkandi ,Nagarko ,Rahul Gandhi ,Tamil Nadu-Kerala ,Rakulkandi Modal ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...