×

எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்தார். திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். மேலும், வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் செய்தனர். இதையடுத்து, கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் தரிசனம் செய்து அகிலாண்டம் அருகே தேங்காயை உடைத்து வழிபட்டார். பின்னர், சிறிது நேர ஓய்வுக்கு பிறகு புறப்பட்டு சென்றார். அவரிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால், கோயிலுக்கு வந்த இடத்தில் பேட்டியளிப்பதில்லை என அவர் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். தடையை மீறி  தண்ணீர் பாட்டில்: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் உடமைகள், வாகனங்கள் அனைத்தும் அலிபிரி சோதனைச்சாவடி அருகே சோதனை செய்யப்படும். பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தேவஸ்தான அதிகாரிகள் திருமலைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காமல் அதனை பறிமுதல் செய்கின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி வந்த காரில் மட்டுமே 3 பெட்டிகளுக்கு மேல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது. …

The post எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Tirupati ,Tirumala ,AIADMK ,Interim General Secretary ,Swami ,Tirupati Seven Malayan Temple ,
× RELATED முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை...