×

துலீப் கோப்பை காலிறுதியில் மேற்கு மண்டலம் அபார ரன் குவிப்பு: பிர்த்வி 113, யாஷஸ்வி 228, ரகானே 207

சென்னை: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில், வட கிழக்கு மண்டல அணிக்கு எதிராக மேற்கு மண்டலம் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன் குவித்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வட கிழக்கு மண்டலம் முதலில் பந்துவீச முடிவு செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கு மண்டலம் விக்கெட் இழப்பின்றி 116 ரன் எடுத்திருந்தது (25 ஓவர்). பிரித்வி ஷா 61 ரன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 55 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.அபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 206 ரன் சேர்த்தது. பிரித்வி 113 ரன் (121 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அங்குர் மாலிக் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஆஷிஷ் தாபாவிடம் பிடிபட்டார். இதையடுத்து, யாஷஸ்வியுடன் கேப்டன் அஜிங்க்யா ரகானே இணைந்தார். வட கிழக்கு மண்டல பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 333 ரன் சேர்த்து அசத்தியது. யாஷஸ்வி 228 ரன் (321 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஜொனாதன் பந்துவீச்சில் கோந்தவ்ஜம் வசம் பிடிபட்டார்.2ம் நாள் ஆட்ட முடிவில் மேற்கு மண்டலம் 2 விக்கெட் இழப்புக்கு 590 ரன் குவித்துள்ளது (123 ஓவர்). ரகானே 207 ரன் (264 பந்து, 18 பவுண்டரி, 6 சிக்சர்), ராகுல் திரிபாதி 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது. கிழக்கு மண்டலம் 397: வடக்கு மண்டலத்துடன் பாண்டிச்சேரியில் நடக்கும் காலிறுதியில், முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்திருந்த கிழக்கு மண்டலம் நேற்று 397 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விராத் சிங் 117, சுதிப் குமார் 68, ஷாபாஸ் அகமது 62, மஜும்தார் 47, மணிசங்கர் 32 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வடக்கு மண்டலம், 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன் எடுத்துள்ளது. யஷ் துல் 35, மனன் வோரா 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர்….

The post துலீப் கோப்பை காலிறுதியில் மேற்கு மண்டலம் அபார ரன் குவிப்பு: பிர்த்வி 113, யாஷஸ்வி 228, ரகானே 207 appeared first on Dinakaran.

Tags : West Zone ,Duleep Cup ,Prithvi ,Yashshwi ,Rakane ,Chennai ,North East Zone ,Yashasvi ,Ragane ,Dinakaran ,
× RELATED எல்லையில் துப்பாக்கியுடன்...