×

ஆபாச வீடியோ அனுப்புவதாக மிரட்டல் ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற தம்பதி தற்கொலை: 2 குழந்தைகள் ஆதரவற்று தவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் உள்ள ராஜவோம்மங்கி அடுத்த லபார்ட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி துர்காராவ்- ரம்யாலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் கடன் செயலி மூலமாக துர்கா ராவ் கடன் வாங்கினார். அதை திருப்பி செலுத்த முடியாததால், மிரட்டல் தொடங்கியது. பணத்தை செலுத்தவில்லை என்றால், மனைவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவோம் என மிரட்டினர். மேலும், அந்த ஆபாச புகைப்படங்களையும் அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினர்.  இதை பார்த்து தம்பதி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், மனமுடைந்து கடந்த தம்பதி, கோதாவரி கரையோரத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அனாதைகளான 2 குழந்தைகளுக்கும் முதல்வர் ஜெகன் மோகன் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து, அவர்களை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்….

The post ஆபாச வீடியோ அனுப்புவதாக மிரட்டல் ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற தம்பதி தற்கொலை: 2 குழந்தைகள் ஆதரவற்று தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Durgarao-Ramyalakshmi ,Rajavommangi ,Labarty village ,Alluri Seetharamaraju district, Andhra ,
× RELATED டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது: தெலங்கானாவில் பரபரப்பு