×

உதவி ஆய்வாளரை தாக்கிய 2 பேர் கைது

சென்னை: மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வினோத்குமார் (29) என்ற இளைஞரை சோதனையிட்டனர். அவர், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அவருக்கு அபராதம் விதித்து அதற்கான ரசீதை அளித்துள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்தில் தனது வாகனத்தை எடுக்க முயன்றபோது, அங்கு காத்திருந்த வினோத், காவலரின் பேட்டன் லைட்டை உடைத்ததுடன் நண்பருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அங்கு வந்த அவரின் நண்பர் ராபர்ட் (27), உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் தகராறில் ஈடுபட்டதுடன் இருவரும் சேர்ந்து உதவி ஆய்வாளர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளனர். இதுகுறித்து, உதவி ஆய்வாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த மயிலாப்பூர் போலீசார் வினோத், ராபர்ட் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து போக்குவரத்து காவலர் விபின் அளித்த புகாரின்பேரில் வினோத், ராபர்ட் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்….

The post உதவி ஆய்வாளரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapore R.K. Police ,Mylapur ,Traffic Assistant Inspector ,Ravichandran ,Madam Road ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் வாக்குச்சாவடி எண்-13ல்...