- சீரமைப்பு ஆலோசனை
- காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் கலெக்டர்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
- Kanjipuram
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பான முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் குறித்து கலந்தாய்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் திலகர், வெங்கடேசன், ஜெகநாதன், மலர்மன்னன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்துரு, சங்கர், சுதா (எ) சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், நேரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.வி.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) த.ரவிசந்திரன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்தும் வாக்காளர் பட்டியலில் முறையாக சரி செய்யும்படி விவாதிக்கப்பட்டது….
The post காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி சீரமைப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.