×

முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கோவை அதிமுக நிர்வாகி கைது

அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர். இவர் சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறு பரப்பியதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் சுப்பிரமணியத்தின் அலுவலகத்திற்கு சென்ற போலீசார் அவரை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட 4 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியத்தை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். …

The post முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கோவை அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Annur ,Subramaniam ,Masakkounton Setipalayam ,Annur, Govai District ,Northern District ,Cov ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...