பீஜிங்: சீனாவில் திபெத்தை ஒட்டிய சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லடிங் நகரில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. . இதில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 26 பேர் காணவில்லை. சேதமடைந்த பகுதிகளில் சீன ராணுவமும், பேரிடர் மீட்புக்குழுவும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, மலைப்பிரதேச பகுதி குடியிருப்புகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.*நிலச்சரிவு 15 பேர் பலி தென்மேற்கு உகாண்டாவில் பெய்த கனமழையால் காங்கோவின் எல்லைக்கு அருகில் மலை மாவட்டமான காசேசில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். …
The post சீனாவில் நிலநடுக்கம் பலி 74 ஆக உயர்வு appeared first on Dinakaran.