×

பெண்கள் பள்ளியில் தொடங்கிய படம்

சென்னை: டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சாணி’ என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பெண்கள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட்டு புத்தகம், பேனா மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு, கல்விக்கும் கலைக்கும் இடையே பாலம் அமைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வு அமைந்தது என்றார் இயக்குனர் சி.மோகன்ராஜ்.

Tags : Chennai ,Dr. ,Ambedkar ,Karunguzhi village ,Madhurantakam taluk ,Chengalpattu district ,Marudhu Productions ,C. Mohanraj ,
× RELATED திடீரென்று கிளாமருக்கு மாறிய ரஜிஷா விஜயன்