×

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

வேளச்சேரி: வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சிவாஜி (29). சொந்தமாக லோடு வேன்  வைத்து ஓட்டி வருகிறார்.  இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். காலையில் வண்டியை எடுக்க வந்தபோது வண்டியில் இருந்த பேட்டரி காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து, வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், பழைய குற்றவாளிகளான   வேளச்சேரி, நேருநகரை சேர்ந்த விஜயகுமார் (20), அரவிந்த் (22), ஹரிஷ் (20) ஆகியோர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் பிடித்து விசாரணை  நடத்தினர். அதில், இவர்கள் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் பேட்டரிகளை திருடி, அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (40) என்பவரிடம் விற்றதாக தெரிவித்தனர்.  இதையடுத்து, ஜெயசீலன் உள்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர்….

The post சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Shivaji ,Housing Board Apartments ,
× RELATED ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை