×

மாதவரம் மண்டலம் 23-வது வார்டில் மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டுக்கு உட்பட்ட புழல் காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், திருமலை நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 30 மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, கடந்த அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய் பணி தொடங்கப்பட்டது. இதனால், தெருக்கள், குடிநீர் குழாய்கள் மற்றும்   தெருவிளக்குகள் சேதமடைந்தன. சிதிலமடைந்துள்ள தெருக்கள்  இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர். மழைக் காலங்களில் தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம் போல் உள்ளது. எனவே, பருவ மழை தொடங்குவதற்கு முன்பே, மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,  தெருக்களை சரி செய்ய மாதவரம் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என புழல் கண்ணப்பசாமி நகர் குடியிருப்பு நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மாதவரம் மண்டலம் 23-வது வார்டில் மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madhavaram Mandal ,23rd Ward ,Puzhal ,Kavankarai ,Kannappa Sami Nagar ,Tirumalai Nagar ,Chennai Corporation ,Madhavaram Mandal 23rd Ward ,Dinakaran ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி