×

திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு திரும்பும் போது புளியமரத்தில் கார் மோதி விபத்து மணமகனின் தாயார் பரிதாப பலி-போலீசார் விசாரணை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் சின்னமசூதி தெருவை சேர்ந்தவர் தம்பு (57). இவரது மனைவி கீதா (50). தம்பதியர் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் ஜவுளி கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களது மகன் கார்த்திக் (23) என்பவருக்கு திருமணம் நிச்சயம் செய்து, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்கள் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர்களுக்கு காரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரிக்கரை சாலை திருச்சின்னபுரம் அருகே வரும் போது காரை ஓட்டிய தம்புவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்  திருமணம் நிச்சயிக்கப்பட்ட கார்த்திக்குடன் சென்ற உறவினர் சுசிலா, கார்த்திக்கின் தாயார் கீதா, தந்தை தம்பு ஆகியோர் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தனர். இதில் கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீராணம் ஏரிக்கரை சாலையில் அதிகாலை நடந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு திரும்பும் போது புளியமரத்தில் கார் மோதி விபத்து மணமகனின் தாயார் பரிதாப பலி-போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Thambu ,Chinnamasoodhi Street ,Geeta ,Kattumannarko ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!