×

அரசு பேருந்தில் கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திரா மாநில அரசு பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், ஒரு பெரிய டப்பா இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது. இது தொடர்பாக பேருந்தில் பயணம் செய்த இருவரை பிடித்து போலீசார் ஆரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில்  ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த பதன்பண்டு (21), யாதாரா ராஜேஷ்வரி (32) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 10 கிலோ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என விசாரிக்கின்றனர்….

The post அரசு பேருந்தில் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ganja ,Kummidipoondi ,Elavoor Integrated Checkpost ,Dinakaran ,
× RELATED எளாவூர் ஒருங்கிணைந்த...