×

பாகுபலி நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி போலீஸ் விசாரணை: சுகேஷ் சந்திரசேகரின் ரூ.200 கோடி மோசடி பற்றி சரமாரி கேள்வி..!!

டெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக கவர்ச்சி நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, சிறையில் இருந்தபடியே தொழிலதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பறித்தது உட்பட ஏராளமான வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் சிக்கியிருக்கிறார். இவருடன் தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின், நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன் ஒருகட்டமாக நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது சுகேஷ் சந்திரசேகர், பணம், பரிசு பொருட்கள் கொடுத்தாரா? என்று அவர்கள் துருவி துருவி கேள்விகளை எழுப்பினர். இதனிடையே வருகின்ற 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சுகேஷ் சந்திரசேகர் மூலமாக ஆதாயம் பெற்ற புகாரில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருக்கிறது. நோரா பதேஹியிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரின் மனைவி, நடிகை லீனா மரியா பாலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post பாகுபலி நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி போலீஸ் விசாரணை: சுகேஷ் சந்திரசேகரின் ரூ.200 கோடி மோசடி பற்றி சரமாரி கேள்வி..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Police ,Nora Badehi ,Chamari ,Sukesh Chandrasekar ,Delhi ,Sukesh Chandrasekhar ,
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு