×

ஜாமீனில் விடுதலையான பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து

மதுரை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது.  இதில் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் மதுரையில் தங்கி இருக்க வேண்டும், 2 ஆசிரியர்கள் சேலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நிபந்தனை விதித்திருந்தார். ஆசிரியர்கள் இருவரும் சேலம் செவ்வாய் பேட்டை காவல்நிலையத்திலும், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோர் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திலும் கையெழுத்திட்டனர். …

The post ஜாமீனில் விடுதலையான பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kaniyamoor ,Chinna Salem, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை