×

சத்தியமங்கலம் அருகே பாலத்தை கடக்க முயன்ற பசுமாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தரை பாலத்தை கடக்க முயன்ற 4 பசுமாடுகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள பள்ளங்கள், ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை நீர் மாக்கம்பாளையம் வனப்பகுதியாக செல்லும் பாலாற்றில் கலந்து வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. நேற்று மாலை மாக்கம்பாளையம் அருகே கோம்பையூர் பகுதியில் சாலையின் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கூட்டம் கூட்டமாக தரைப்பாலத்தின் வெள்ளத்தை கடந்து செல்ல முயன்றன. அப்போது நீரின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 4 மாடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு தத்தளித்தன. இந்த காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர். அது சமூக வலைதளத்தில் தற்போது வைராகி வருகிறது….

The post சத்தியமங்கலம் அருகே பாலத்தை கடக்க முயன்ற பசுமாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Greens ,Herod District Sathyamangalam ,Sathyamanalam ,Dinakaraan ,
× RELATED குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!