×

மோடியின் சொல், செயல் ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: குஜராத்தில் சபர்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பின்னர், ராட்டையில் நூல் நூற்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘காதியின் நூல்தான் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்தது. நாட்டின் தற்சார்பு நிலையை எட்ட காதி உத்வேகம் அளிக்கும். வரவிருக்கும் பண்டிகை காலங்களில் காதி கிராம தயாரிப்புகளை பரிசளியுங்கள்,’என்று தெரிவித்தார்.இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தேசத்துக்கு மட்டும் காதி, தேசியக்கொடிக்கு சீன பாலிஸ்டரா? வழக்கம் போல், பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த தொடர்புமில்லை,’என்று கூறினார்….

The post மோடியின் சொல், செயல் ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahaul Gandhi ,New Delhi ,PM Modi ,Atal Bridge ,Sabarmadi River ,Gujarat ,Dinakaran ,
× RELATED மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை...