×

சினிமா துறையில் எனக்கு நண்பர்களே இல்லை: சமந்தா வேதனை

சென்னை: சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் நடிகை சமந்தா. இது குறித்து அவர் கூறியது: சினி​மா​வில் பதினைந்து வருடங்​கள் என்​பது நீண்ட காலம். இப்​போது நான் நடித்த சில படங்​களைப் பார்க்​கும்​போது, இவ்​வளவு மோச​மாகவா நடித்​திருக்​கிறேன் என்று தோன்​றுகிறது. ஆனால் நான் அப்​படித்​தான் கற்​றுக்​கொண்​டேன். எனக்கு சினி​மா​வில் வழி​காட்ட யாரு​மில்​லை. வேறு மொழிகள் கூட தெரி​யாமல்​தான் இருந்​தேன்.
எல்​லா​வற்​றை​யும் புதி​தாகக் கற்​றுக்​கொள்ள வேண்​டி​யிருந்​தது. எனக்கு சினி​மா​வில் நண்​பர்​கள் இல்​லை, தொடர்​புகள் இல்​லை, உறவினர்​கள் இல்​லை. எல்​லாம் புதி​தாக இருந்​தது. அதையெல்லாம் கடந்துதான் இதுவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.

Tags : Samantha ,Chennai ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’