×

கிணற்றில் பொங்கிய கங்கை :கார்த்திகை அமாவாசை

கார்த்திகை அமாவாசை 14-12-2020

திருவிசநல்லூர், கும்பகோணம்

ஆந்திர தேசத்தில் ராஜமகேந்திரம் என்கிற நகரத்தில் பிரம்மராயர்கள் என்றும் அமாத்ய குலத்தவர் என்றும் புகழ்பெற்ற பிராமணர்கள் இருந்தனர். இவர்கள் பிராமணர்களுக்குரிய வேத வேதாந்தங்கள்  மட்டுமல்லாது ராஜநீதி, தனுர் வேதம், சேனா சதுரங்கம், சிற்ப சாஸ்திரம் முதலியவற்றை படித்தும் போதித்தும் வந்தனர். அப்படியான அமாத்ய குலத்தில் பிறந்து மைசூர் ராஜ்ஜியத்தில் மந்திரி பதவி  வகித்தவரே லிங்கார்யர் என்பவராவார். இவருடைய திருப்புதல்வரே ஸ்ரீதர வெங்கடேசர் ஆவார். ஐயாவாள் பரம சிவபக்தர். காலம் மெல்ல நகர்ந்தது. அது கார்த்திகை மாதம். அமாவாசை தினம். அன்று  அவர் சிரார்த்தம் செய்யும் தினமும் சேர்ந்தே வந்தது. பிராமணர்களை அழைத்தார். அவரும் காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு வந்தார்.

உள்ளே நுழையும்போதே, ‘‘ஐயா... பசிக்குதுங்கய்யா. சோறு  போடுங்கய்யா’’ என்று வாசலில் வேலைக்காரன் சாம்பன் என்பவனின் குரல் பல நேரங்களில் இரவில் ஐயாவாள் காவிரியை கடக்கும்போது தீவட்டி பிடிப்பான்.  ஓரத்தில் இன்றோ சிரார்த்தம். பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்துவிட்டு பிறகுதான்தானே சாப்பிட வேண்டும்.  ஆனால் வெளியே... ‘‘ஐயா... சாம்பன் வந்திருக்கேங்க’’ என்று மீண்டும் குரல் கேட்டது. ஐயாவாளுக்கோ சாட்சாத் அந்த பரமசிவனே வந்து கேட்பதுபோல் இருந்தது. சிவநாமத்தை சொல்லிச் சொல்லி சிவ  மயமாகவே நிற்பவர், ஐயாவாள். தான் காணுமிடங்களிலெல்லாம் சிவத்தைத் தவிர வேறெதுவும் இல்லை எனும் நிலையில் இருந்தார். சாஸ்திரமா... கருணையா... என்று வரும்போது ஞானிகள் கருணை  எனும் தர்மத்தைத்தான் எடுத்துக்கொள்வார்கள். அப்படித்தான் ஐயாவாள் பசிக்கிறதே... என்று குரல் கொடுத்த சாம்பனை நோக்கி நடந்தார்.தோட்டத்திற்கு வரச் சொன்னார். அங்கிருந்த சாப்பாட்டை எடுத்து  பரிமாறச் செய்தார். அவனும் உணவை உண்டுவிட்டு மீதியை துண்டில் கட்டிக் கொண்டு புறப்பட்டான். ஐயாவாள் வீட்டை மீண்டும் சாணியால் மெழுகினார். புதிதாக சமையலைச் செய்யுங்கள் என்று  உத்தரவிட்டார்.

வீட்டிற்குள் இருந்த பிராமணர்கள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் தன்னைப் பார்க்கும்போதுதான் ஐயாவாளுக்கு சுய பிரக்ஞையே வந்ததுபோல் இருந்தது. ஏதோ ஒரு  உன்மத்தத்தில் செயலைச் செய்து விட்டு ஓய்ந்தவர்போல காணப்பட்டார். அவர்களை உற்றுப் பார்த்தார். இவர்கள் அனைவருமே வேதத்தின் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விதிகளை  அனுஷ்டிக்கிறவர்கள். ஜீவன் செய்ய வேண்டிய சகல கர்மங்களையும் வரி பிசகாது கடைப்பிடிப்பவர்கள். எனவே, இவர்கள் யோசிப்பதிலும் தவறில்லை. ஆனால், மகேசனோ ஒரு நிலைக்கு மேல் தன்  பக்தனை வரைமுறைக்குள் வைப்பதில்லை. அடைய வேண்டிய ஆத்மாவை அடைந்தவர்களுக்கோ அல்லது முமுட்சுக்கள் எனப்படும் தீவிரமான சாதகனையோ பரமேஸ்வரன் அவரின் இஷ்டப்படிதான்  நடத்துகிறான். என் விஷயத்திலும் இப்படித்தான் நடத்துகிறான் என்று உள்ளுக்குள் திடமாக இருந்தார். அதேசமயம் வந்திருந்த பிராமணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டார்.  ‘‘இதற்கு பரிகாரம் என்ன’’ என்று ஒரே கேள்வியாக நேரடியாகக் கேட்டார்.

‘‘கங்கையில் மூழ்கி ஸ்நானம் செய்வதேயாகும்’’ மூவரும் தீர்க்கமாக ஒரே குரலில் சொன்னார்கள். ஐயாவாள் சாந்தமாக கண்களை மூடினார். இப்போது நான் என்ன செய்வது? சகல வேதங்களையும்  கரைத்து குடித்தவர். ஒரு சிரார்த்தத்தின் விதி தெரியாது போலிருக்கிறதே என்று எல்லோரும் தூற்றுவார்கள். அதுகூட பரவாயில்லை. நாளைக்கு அவரே அப்படி நடந்துகொண்டு விட்டார். நாமெல்லாம்  சிரார்த்தம் செய்யலாமா வேண்டாமா என்றெல்லாம் யோசிப்பார்களே. ஆனால், வாயிலில் முதலில் சாம்பனின் குரல் கேட்டபோது சாட்சாத் அந்த சாம்பசிவனே வந்ததுபோல் இருந்தது. பிறகு  நடந்ததெல்லாம் கனவு போல இருக்கிறதே என்று சட்டென்று ஐயாவாள் அதிசூட்சுமமாக தன் பார்வையை உள்ளுக்குள் திருப்பி பரமேஸ்வரனிடம் பேசத் தொடங்கினார். பேசாமல் பேசுதல் எனும் பெரும்  நிலையை அவர் அடைந்திருந்தார். ‘‘என்ன ஸ்ரீதரரே இறுதியில் இப்படி நடந்துவிட்டது. இப்படி மலங்க மலங்க விழிக்கிறீர்’’ சர்வேஸ்வரன் சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘‘உங்களின் திருநாம ஜபமே எங்கு பார்த்தாலும் உங்களையே காட்டும்படிச் செய்து விட்டது. வந்தவனுக்குள்ளும் உங்களையேதான்
கண்டேன்’’ என்றார்.‘‘அப்படியெனில் வந்த நம் சாம்பனும் ஈஸ்வரனும் ஒன்று என்று அந்த அந்தணர்
களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுங்கள். என் விஷயத்தில் இதிலொன்றும் தவறில்லை என்று சொல்லிவிட்டு சாப்பிடச் சொல்லுங்கள்’’. ‘‘நான் அப்படிச் செய்தபிறகுதான் சுய நினைவே வந்தது. இந்த  சிரார்த்தத்தை ஒழுங்காக செய்தால்தானே
தங்களுடைய நாமஜபமே சித்திக்கும்.’’
‘‘அப்படியெனில் அவர்கள் சொன்னபடி
கங்கைக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்.’’
‘‘இங்கிருந்துகொண்டே கங்கே... கங்கே... என்று சொன்னால்கூட போதுமல்லவா.   
சாஸ்திரமும் இதை அங்கீகரிக்கிறது

அல்லவா.’’

‘‘கவலைப்படாதே. நீர் சொல்லும் நாமமே உன்னை காப்பாற்றும்’’‘‘சுவாமி. நான் அப்படியொன்றும் நாத்தழும்பேற நாமங்களை சொல்கிறேனா என்ன. நாம சித்தி எனக்கு எங்கே கிடைத்துவிட்டது. உலக பிரக்ஞை இன்னும் என்னிடம் மறையவில்லையே.  இரண்டுங்கெட்டானாகத்தானே இருக்கிறேன்.’’
‘‘இந்த சிரார்த்தம் முடியவில்லையானால் பரவாயில்லை.’’‘‘பகவானே அதுதான் உங்களின் திருவுள்ளமெனில் அப்படியே நடக்கட்டும். ஆனால், சிரார்த்தத்திற்காக நேற்றிலிருந்து உபவாசத்தோடு வந்திருக்கும் பிராமணர்கள் வேறெங்கும் சாப்பிட மாட்டார்களே.’’‘‘அப்போது நீர் கங்கைக்கு சென்று வந்தபிறகுதான் அவர்கள் சாப்பிட வேண்டுமெனில் உடனடியாக நீர் இப்போதே புறப்பட்டாக வேண்டுமே.’’‘‘பகவானே... உங்களின் நாம ஜபம் விடக் கூடாது  என்பதற்காகவே இங்கிருக்கும் கிணற்றினில் குளித்து விடுவேன். காவிரிக்கு போவதில்லை. எனக்கு உங்களின் திருநாமத் தீர்த்தம் தவிர வேறு தீர்த்தங்கள் தெரியாது அல்லது கங்கையை இப்போது  நான்  அழைத்தால் இங்கேயே வருவாளா என்ன. எப்போது நான் செல்வது.’’

‘‘ஸ்ரீதரரே... இப்போது என்னதான் செய்யப் போகிறீர்.’’ சிவனார் இறுதியாக அவரின் நாம உறுதியைச் சோதித்தார்.‘‘சுவாமி நான் எதையும் செய்யப்போவதில்லை. உங்களின் திருநாமமே எனக்குக் கதி.  கங்காதர... கங்காதர... கங்காதர.... என்று மட்டுமே சொல்வேன். வேறொன்றும் சொல்லத் தெரியாது’’ என்று கங்காஷ்டத்தை தன்னையும் மீறி பாடத் தொடங்கினார். அருகேயிருந்த பிராமணர்கள் அவரையே  அதிர்ச்சியோடு பார்த்தார்கள். கங்கையை தலையில் சூடியவன் அன்றைய நாள் ஐயாவாளின் வீட்டிற்குள் உள்ள பத்தடியே ஆன கிணற்றுக்குள்ளிருந்து கங்கையை பொங்க வைத்தான். அந்த கங்கை  ஐயாவாளின் சிவ பக்தியால் பெருகிய ஆத்ம கங்கையாவாள். பக்தனின் துயர் துடைக்க ஈசனே முறையையும் பாதைகளையும் மாற்றுகிறான். அப்படியே எங்கோ வடநாட்டில் பாய்ந்துகொண்டிருந்தவள்  இந்த சிறு கிராமத்தை கண நேரத்தை அடைந்து கிணற்றிலிருந்து ஊற்றாக உயர்ந்தாள். கிணற்றுப் பக்கம் ஏதோ பேரருவியின் சத்தம் கேட்பது போல இருந்தது. பிராமணர்கள் ஓடிச் சென்று பார்த்து  ஆனந்தப்பட்டனர். கங்கையானவள் கூடம், தாழ்வாரம், திண்ணை, தெரு என்று பாய்ந்தோடியது. ஆதியில், ஈசனுக்குக் கட்டுப்பட்டவள் இப்போது பக்தனுக்காக ஆனந்தமாக அந்த கிராமத்தை மூழ்கிவிடத்  துடித்தாள். சிலருக்கு ஏதோ ஊற்று போல இருந்தது. பக்கத்திலுள்ளவர்கள் கங்கையிலுள்ள முதலைகளும், ஆமைகளும் ஊர்கின்றன என்றவுடன் பயந்துபோய் ஒதுங்கினர். நேரேயே பார்த்து அதிர்ந்தனர்.

ஸ்ரீதர ஐயாவாளின் பிரபாவமும் உயர்ந்த நிலையையும் அறிந்தவராகவும் இருந்தார். ஞானியை ஞானியே அறிவர். ஆனால், ஞானிகளை பரம்பொருள் எல்லோருக்கும் அடையாளங்காட்டி அவரின்  திருப்பாதத்தில் கொண்டு சேர்க்கிறது. இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் ஐயாவாள் மடத்திலும் நிகழ்கிறது. ‘‘ஸ்ரீ வெங்கடேச ஸ்ரீதர  ஐயாவாள் தன்னுடைய கங்காஷ்டகத்தில், கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு என்று வேண்டுகிறார். அதனால் இந்த கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கையே.இது பத்து நாட்கள்  உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதில் பத்தாம் நாள் உற்சவமான கார்த்திகை அமாவாசை இந்த ஆண்டு (14-12-2020) அன்றுதான் கங்கை இங்குள்ள கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும்  திவ்ய நாம சங்கீர்த்தனம் விடிய விடிய நடந்தபடி இருக்கும். அமாவாசையன்று அதிகாலை காவிரிநதிக்குச் சென்று சங்கல்ப ஸ்நானம் செய்துவிட்டு அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் இடுவோம்.  பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவோம். ஆச்சரியமாக ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது.ஞானம்  வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று நாமும் நீராடுவோமாக. கும்பகோணம்-வேப்பத்தூர் பாதையில் திருவிசநல்லூர் அமைந்துள்ளது.  

கிருஷ்ணா

Tags : well ,Ganges ,moon ,Karthika ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...