×

காஷ்மீரில் சிக்கிய மனித வெடிகுண்டு பாக். சதி அம்பலம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஷெகர் மாக்ரி பகுதியில் கடந்த 21ம் தேதி ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒருவன் ஊடுருவ முயன்றான். ராணுவம் அவனை துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து விழுந்தான். அவனை பிடித்து, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து ரத்தம், கொடுத்து உயிரை காப்பாற்றினர். அவன் பெயர் தபராக் உசைன். இவனிடம் எடுக்கப்பட்ட சிறப்பு பேட்டியில், ‘பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த அதிகாரி யூனுஸ், நான் உட்பட 5 பேரை ஜம்முவில் ராணுவ முகாம்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பி வைத்தார். இதற்காக எங்களுக்கு அவர் ரூ.30 ஆயிரம் கொடுத்தார்,’ என்று தெரிவித்தான். இவன் ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு ஜாங்கர் என்ற இடத்தில் வெடிகுண்டு வைத்தபோது சிக்கினான். 26 மாதங்கள் சிறையில் இருந்த இவன், விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு உளவுத்துறையில் பயிற்சி பெற்றுள்ளான்.  …

The post காஷ்மீரில் சிக்கிய மனித வெடிகுண்டு பாக். சதி அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Pak ,Kashmir ,Srinagar ,Shekhar Magri ,Jammu and ,Pakistan ,Sati ,Ambalam ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்