×

கிழக்கு கடற்கரை சாலையில் பயங்கரம் சென்டர் மீடியன் மீது பைக் மோதி இருவர் பலி

சென்னை: கிழக்கு கடற்கரை  சாலையில் வந்தபோது பைக் சென்டர் மீடியனில் மோதியதில், புகைப்பட கலைஞர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சென்னை அடுத்த தரமணி, மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரித்தீஷ்(21) சென்னை விமான நிலையத்தில் பணியாற்றுகிறார். இவரது நண்பர் ஜெகதீஸ்வரன்(25), புகைப்பட கலைஞர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு, கானத்தூர் ஆகிய பகுதிகளில் புகைப்படம் எடுத்துவிட்டு நேற்று அதிகாலை பைக்கில் வீடு திரும்பினர். கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே வந்தபோது எதிர்பாராத விதமாக பைக் சென்டர் மீடியன் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்து விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

The post கிழக்கு கடற்கரை சாலையில் பயங்கரம் சென்டர் மீடியன் மீது பைக் மோதி இருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Terror Centre Median ,East Coast Road ,Chennai ,Centre Medion ,Terror Center Median ,
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை...