×

தாமரைப்பாக்கம் அருகே விளைநிலங்களில் சாயும் பழுதான மின்கம்பங்கள்

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாயல் ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காரணிப்பேட்டையில் இருந்து குருவாயல் ஊராட்சி பகுதிகளுக்கு செல்லும் சாலை அருகே, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட சிமென்ட் மின்கம்பங்கள் உதிர்ந்து, அதன் துருப்பிடித்த கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், பல கம்பங்களின் நடுப்பகுதி உடைந்து, சாலை மற்றும் விளைநிலங்களை நோக்கி அபாயநிலையில் சாய்ந்துள்ளன. இந்த ஊராட்சியில் இதேபோல் ஏராளமான மின்கம்பங்கள் சேதமாகி, அதன் மின்கம்பிகளில் செடி,கொடிகள் படர்ந்துள்ளன. பழுதான மின்கம்பிகளில் ஒட்டுகள் போடப்பட்டு உள்ளன. மேலும், பல மின்கம்பிகள் விளைநிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ளன. எனவே, இப்பகுதியில் சேதமான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன், குருவாயல் ஊராட்சியில் அனைத்து மின்கம்பங்களையும் உடனடியாக மாற்றி சீரமைக்க மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

The post தாமரைப்பாக்கம் அருகே விளைநிலங்களில் சாயும் பழுதான மின்கம்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Thamaraipakkam ,Periyapalayam ,Kuruvayal panchayat ,Ellapuram ,Thiruvallur district ,Khakarpettai ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்