- கோவை
- நீலகிரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல் ஆய்வு மையம்
- சென்னை
- நீலகிரி
- பிறகு நான்
- திண்டுக்கல்
- திருப்பூர்
- தென்காசி
- கூ
- தின மலர்
சென்னை : வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை ,நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை, நாளை மறுநாளும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 7,8-ல் குமரி, நெல்லை, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 9,10-ல் குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 20 செ.மீ. மழை பதிவாகியது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கொட்டி தீர்த்த அதி கனமழையால் 32 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று மேல்பவானியில் 20 செ.மீ., பந்தலூர் தாலுகாவில் 14செ.மீ. மழை பதிவானது. மீனவர்களுக்கான எச்சரிக்கைஇன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கர்நாடகா கடலோரம், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் ஆந்திர கடலோரம், மதொய்ய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஆகஸ்ட் 8 முதல் 10 வரை குமரிக்கடல் , மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது….
The post தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.