×

தப்புக் கணக்கு போட்டேன்: நாக சைதன்யா வருத்தம்

ஐதராபாத்: நாகசைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் தேங்க் யூ. இந்த படத்தை யாவரும் நலம், 24 ஆகிய தமிழ் படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபீசில் தோல்வியை தழுவியது. இந்த படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் நாகசைதன்யா கூறும் போது, ‘சில சமயங்களில் கதை விஷயத்தில் நாங்கள் தப்புக்கணக்கு போட்டு விடுகிறோம். ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். ஆனால் சில இடங்களில் நாங்கள் கோட்டை விட்டு விடுகிறோம். இந்த நிலையில் எந்த இடத்தில் தப்பு செய்தோம்? எந்த இடத்தில் சரியாக செய்திருக்கலாம்? என்பது குறித்து பாடம் கற்றுக் கொண்டு வருகிறோம். ஒரு வெற்றி சில விஷயங்களை மட்டும் தான் கற்றுக் கொடுக்கும், ஆனால் ஒரு தோல்வி பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும்’ என்று கூறியுள்ளார். விக்ரம் குமார் கூறும்போது, ‘வெற்றி படங்களை நான் இயக்கியபோது பாராட்டிய மீடியா, நான் சறுக்கும்போது, அதையும் நாசுக்காக சொல்லி என்னை விழிப்படைய செய்கிறார்கள். அந்த வகையில் செய்த தவறை என்னால் சரிசெய்து கொள்ள முடியும் என நம்புகிறேன்’ என்றார்….

The post தப்புக் கணக்கு போட்டேன்: நாக சைதன்யா வருத்தம் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Nagachaitanya ,Naga ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...